
காவலில் ஓர் இரவு
Tamil General Fiction
அர்ச்சனாவின் முன் கோபத்தால் அவளின் வாழ்க்கை எவ்வாறாகத் திசை திரும்புகிறது என்பதை அவளோடு ஒரு நாள் பயணித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அர்ச்சனா ஒரு இளம் பொறியாளர், அவளின் பெற்றோர்கள் பல முறை முயன்றும் அவளின் முன் கோபத்தை அவர்களால் மற்ற முடியவில்லை. அவள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் சண்டை போடுவாள், பின்பு தனது தவற்றுக்காக வருந்துவாள்.
அன்று அவளின் நாள் சுமாராகத்தான் ஆரம்பித்தது, ஆனால் அலுவலகத்தில் வேலைப்பளு அவ்வளவாக இல்லாதது நிம்மதியைத் தந்தது. அந்த நிம்மதி பக்கத்து வீட்டு சித்ரா அக்காளின் தொலைப்பேசி அழைப்பு சிதைத்துவிட்டது.
அவள் தனது வாழ்நாளில் முதன் முறையாகக் காவல் நிலையம் செல்லவேண்டியதாயிற்று. அங்கு அவளுக்கு நடந்தது என்ன என்பதை மேலும் இந்த சிறுகதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.